“அப்பா கொ ரோ னாவால் இ றக் கவில்லை”..! – கண்ணீருடன் பேசிய எச்.வசந்தகுமாரின் மகன் நடிகர் விஜய் வசந்த்..! – cinefeeds
Connect with us

Uncategorized

“அப்பா கொ ரோ னாவால் இ றக் கவில்லை”..! – கண்ணீருடன் பேசிய எச்.வசந்தகுமாரின் மகன் நடிகர் விஜய் வசந்த்..!

Published

on

வசந்த் & கோ நிறுவனரும் கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் கொரோனா உறுதியானதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் நேற்றிரவு இரவு 7 மணியளவில் எம்.பி.வசந்தகுமார் உ யிரி ழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. அவரது மறைவிற்கு தலைவர்கள் பலர் இர ங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் வசந்தகுமாரின் மகன் விஜய்வசந்த் கூறுகையில், சொல்வதற்கு வார்த்தையே இல்லை. அப்பா 6.56-க்கு இயற்கை எய்தினார். கொ ரோ னா தொ ற்றால் பா திக்கப்பட்டு அப்பா மிகவும் கவ லைக்கி டமாக இருந்தார். தி டீரென ஆக்சிஜன் அளவு குறைந்ததால் வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கொ ரோ னாவிலிருந்து மீண்டு மூச்சுவிட ஆரம்பிக்கும்போது பாக்டீரியா இன்பெக்‌ஷன் ஆனது.

Advertisement

இதனால் மீண்டும் அவரது உடல்நிலை கவ லைக்கி டமா னது. உழைப்பை மூலதனமாகக் கொண்டு வெற்றிப்படிக்கட்டில் படிப்படியாக ஏறிய எச்.வசந்தகுமார் கடந்த 2 நாட்களாக எவ்வளவோ மருத்துவர்கள் போ ரா டியும் அப்பாவை காப்பாற்ற முடியவில்லை. அப்பாவிற்கு இரண்டாவது முறை எடுக்கப்பட்ட கொ ரோ னா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்தது. கொ ரோ னாவால் அப்பா இ றக் கவில்லை எனக் கூறினார்.

கொ ரோ னா பா திப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பின்னர் தான், வசந்தகுமார் உடல் பாதுகாப்பு உடைகள் அணிவிக்கப்பட்டு முகம் மட்டுமே தெரியும் அளவிற்கு கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்பட்டு T.நகர் நடேசன் தெருவில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in