CRIME
“அவள் எனக்குத்தான் சொந்தம்..!” பிரிந்து வாழ்ந்த 24 வயது மனைவி திடீர் மாயம்.. 5 நாட்களுக்கு பின் பூட்டிய அறைக்குள் போலீஸ் பார்த்த அதிர்ச்சி காட்சி.. சைக்கோ கணவனின் அதிரவைக்கும் பின்னணி..!!!
பிரேசில் நாட்டின் கோயாஸ் மாநிலத்தில், தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த 24 வயது இளம்பெண் ஒருவர், மருத்துவமனைக்குச் சென்றுவிட்டுத் திரும்பியபோது திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் உடனடியாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், திடீரென அந்தப் பெண்ணின் முன்னாள் கணவரின் குடும்பத்தினரும் தங்களது மகனைக் காணவில்லை எனப் போலீசில் புகார் அளித்தனர். ஒரே நேரத்தில் கணவன், மனைவி இருவருமே காணாமல் போனது காவல்துறையினருக்குப் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. இளம்பெண் காணாமல் போன 5 நாட்களுக்குப் பிறகு, காவல்துறையினர் அந்த முன்னாள் கணவனை அதிரடியாகக் கண்டுபிடித்துக் கைது செய்தபோதுதான் அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தன.
https://twitter.com/5_8fm/status/2091124449907245271/video/1
தனது மனைவியின் பிரிவை ஏற்றுக்கொள்ள முடியாமல், தன் மீதான சந்தேகத்தைத் திசைதிருப்புவதற்காகத் தானும் காணாமல் போனதாகத் தனது குடும்பத்தினர் மூலம் நாடகமாடி, அவரே தனது முன்னாள் மனைவியைக் கடத்தியது விசாரணையில் தெரியவந்தது. கடத்தப்பட்ட அந்த இளம்பெண்ணைப் பசியோடும் கடுமையான மன உளைச்சலோடும் மிகவும் மோசமான நிலையில் காவல்துறையினர் மீட்டனர். உறவு முறிந்ததை ஏற்க முடியாமலும், மனைவியைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து தண்டிக்க வேண்டும் என்ற கொடூரமான எண்ணத்திலுமே இந்த கடத்தல் அரங்கேறியுள்ளது
