LATEST NEWS
“ரூ.10,000 கோடி சொத்து” சமாதானம் ஆகவில்லை…. டி.ஆர் பாலுவுக்கு செக் வைத்த அண்ணாமலை…!!
டிஆர் பாலுவுடன் எவ்வித சமாதானமும் ஏற்படவில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திமுக ஃபைல்ஸ் வெளியீட்டில், டிஆர் பாலுவின் குடும்பம் ₹10,000 கோடி சொத்து குவித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.இதனையடுத்தே, தனது பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தியதாகக் கூறி அண்ணாமலைக்கு எதிராக
₹100 கோடி இழப்பீடு கேட்டு டிஆர் பாலு அவதூறு வழக்குத் தொடர்ந்திருந்தார். ஆனால், தற்போது அந்த வழக்கை டிஆர் பாலு திடீரென வாபஸ் பெற்றுள்ளார். இந்த நிலையில், தான் யாருடனும் சமாதானமாகப் போகவில்லை என்றும், இந்த வழக்கை நீதிமன்றத்தில் தொடர்ந்து நடத்தத் தயாராக இருப்பதாகவும் அண்ணாமலை கூறியுள்ளார். மேலும், நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணையும் செய்வேன் என அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
