LATEST NEWS
ஒரு வீரப்பனை அல்ல, லட்சக்கணக்கான வீரப்பன்களை உருவாக்குவோம்… எலி கறி தின்னும் அவலம்.. அன்புமணியின் அதிரடி பேச்சால் அதிரும் கர்நாடகா..!!
மேகதாது அணை திட்டத்திற்கு எதிராகக் கும்பகோணத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கர்நாடக அரசுக்கு எதிராகக் கடுமையான கருத்துக்களை முன்வைத்துள்ளார். கர்நாடகா மேகதாதுவில் அணை கட்டினால் தமிழக டெல்டா பகுதி மக்கள் எலி கறி தின்னும் அவலச் சூழல் உருவாகும் என்றும், தமிழகத்திற்குத் தண்ணீர் தராமல் தமிழர்களை அழிப்பது மற்றொரு இனப்படுகொலைக்குச் சமம் என்றும் அவர் சாடியுள்ளார். மேலும், கர்நாடகாவிற்கு எதிராக ஒரு வீரப்பனை அல்ல, லட்சக்கணக்கான வீரப்பன்களை உருவாக்குவோம் என்று அவர் பேசியிருப்பது அரசியல் தளத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. கர்நாடகாவின் அணை கட்டும் முயற்சியைத் தடுக்க ஒட்டுமொத்த தமிழகமும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்ற நோக்கில் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ள இந்த அதிரடி பேச்சு, சமூக வலைதளங்களிலும் தற்பொழுது மிகவும் வைரலாகி வருகிறது.
