LATEST NEWS
அரசுக்கே அல்வா கொடுத்த டிரம்ப்..! வெளிச்சத்திற்கு வந்த 33 லட்சம் வைர மோதிர ரகசியம்… பின்னணியில் இருக்கும் செக்..!!!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், விதிகளை மீறி சுமார் 33 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆடம்பரமான வைர மோதிரத்தை வாங்கியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்பவர்கள் தங்களுக்கு வரும் விலையுயர்ந்த பரிசுகளை அரசு கருவூலத்தில் ஒப்படைக்க வேண்டும் அல்லது அதற்குரிய தொகையைச் செலுத்தி சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்ற கடுமையான விதிமுறை நடைமுறையில் உள்ளது.
இந்த நிலையில், டிரம்ப் தனக்குக் பரிசாகக் கிடைத்த அந்த வைர மோதிரத்தை முறைப்படி அரசுக்குத் தெரிவிக்காமலும், அதற்கான தொகையைத் தன் சொந்தப் பணத்திலிருந்து செலுத்தாமலும் ரகசியமாகத் தன் வசம் வைத்துள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த விவகாரம் தற்போது ஊடகங்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இதன் பின்னணியில் இருக்கும் முக்கிய ‘செக்’ என்னவென்றால், அமெரிக்கக் கூட்டாட்சி விதிகளின்படி அதிபர் மற்றும் அவரது குடும்பத்தினர் பெறும் குறிப்பிட்ட தொகைக்கு மேலான வெளிநாட்டுப் பரிசுகள் அனைத்தும் கண்காணிக்கப்படும். இந்த விதிமீறல் நிரூபிக்கப்பட்டால், டிரம்ப் சட்டரீதியான விசாரணைகளையும், அவரது அரசியல் எதிரிகளிடமிருந்து கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவார் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
