LATEST NEWS
நான் பேசுவேன்.. ஆனா இடைத்தேர்தல்லையாவது சில பேருக்கு நல்லது நடக்கட்டுமே… சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கு முதல்வர் விஜய் கொடுத்த அதிரடி பதிலடி..!!
“மக்கள் ஆசையாகஎங்களைச் சட்டப்பேரவைக்கு அனுப்பி வைத்துள்ளனர்” என்று தமிழக முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் மிகவும் அழுத்தமாகப் பேசியுள்ளார். தவெக அரசின் செயல்பாடுகள் மற்றும் பேச்சுக்கள் குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வரும் நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் முதலமைச்சரின் இந்த உரை அமைந்துள்ளது. மக்களிடம் எப்போது பேச வேண்டும், என்ன பேச வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்று அனைத்தையும் பேசிவிட்டுத்தான் இந்த இடத்திற்கு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் விஜய், மக்கள் தங்கள் மீது வைத்துள்ள அன்பின் காரணமாகவும், பெரும் எதிர்பார்ப்போடு ஆசையாகவும் தங்களை இந்தச் சட்டமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்கள் என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தல் குறித்தும் தனது மௌனத்திற்கான காரணத்தையும் அவர் உடைத்துப் பேசினார்.
“இடைத்தேர்தலிலாவது சிலருக்கு நல்லது நடக்கட்டுமே என்றுதான் நான் அமைதியாக உள்ளேன்” என எதிர்க்கட்சியினரைச் சாடும் வகையில் விஜய் வஞ்சப்புகழ்ச்சியாகக் குறிப்பிட்டார். தவெக தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய்யின் இந்த அதிரடியான மற்றும் சாதுரியமான பேச்சு தற்போதைய தமிழக அரசியல் வட்டாரத்திலும், சமூக வலைத்தளங்களிலும் மிகத் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
