CRIME
“நட்பு என்ற பெயரில் வலை..” பிறந்தநாள் விருந்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. பெங்களூரில் நடுங்க வைத்த சம்பவம்..!!
பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் இளம் பெண்ணை வீட்டிற்கு வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு நிறுவனத்தில் பணியாற்றிய சோமசேகர் மற்றும் அவரது நண்பர்கள், நட்பை நம்பிய பெண்ணை விருந்துக்கு அழைத்தனர். கொண்டாட்டம் முடிந்ததும், அமரேஷ் என்பவர் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றதாக கூறப்படுகிறது.
அதிர்ச்சியடைந்த இளம் பெண் அங்கிருந்து தப்பித்து, அவசர உதவி எண் 112-க்கு அழைத்து காவல்துறையிடம் தகவல் தெரிவித்தார். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த ஹொய்சாலா போலீசார் பெண்ணை மீட்டு, தொடர்புடையவர்களை கைது செய்தனர். மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு, பெண்ணின் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவம், சமூக ஊடகங்கள் அல்லது நட்பின் பெயரில் பழகுபவர்களை முழுமையாக நம்புவதற்கு முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய அவசியத்தை மீண்டும் நினைவூட்டுகிறது. பிறந்தநாள் விருந்து என்ற சாக்கில் திட்டமிட்டு அழைத்து பாலியல் வன்கொடுமைக்கு முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், காவல்துறையினர் குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
