LATEST NEWS
ரோட்டோர ‘கொலை வெறி’ ஓட்டம்..! பைக்குகளைப் பறக்கவிட்டு தப்பிய சொகுசு கார்.. வைரல் வீடியோவால் சிக்கிய ஓட்டுநர்..! அதிரடி ஆக்ஷனில் போலீஸ்..!!
மும்பைக்கு அருகிலுள்ள மீரா ரோடு பகுதியில், அதிவேகமாகவும் கவனக்குறைவாகவும் இயக்கப்பட்ட ‘மஹிந்திரா தார் ராக்ஸ்’ என்ற சொகுசு கார், அடுத்தடுத்து பல வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. காஷிகான் மெட்ரோ ரயில் நிலையம் அருகே நடந்த இந்த அதிர்ச்சி சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வேகமாகப் பரவி வருகிறது. ஹரியானா மாநிலப் பதிவு எண் (HR 98 X 5101) கொண்ட அந்த தார் கார், மோதிய வேகத்தில் நிறுத்தாமல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.
இந்த விபத்தின் போது, காரின் பக்கவாட்டில் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் நிலைதடுமாறி சாலையில் விழுந்தார். பின்னால் வந்த மற்ற வாகனங்களில் அவர் சிக்காமல் நூலிழையில் உயிர் தப்பினார். தொடர்ந்து அதே கார் மற்றொரு மோட்டார் சைக்கிள் மீதும் மோதியதில், அதில் பயணித்த இருவர் தூக்கி வீசப்பட்டனர். காயமடைந்தவர்களின் தற்போதைய உடல்நிலை குறித்த துல்லியமான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
அர்பாஸ் ஷேக் என்ற சமூக வலைத்தளப் பயனர் இந்த வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, மும்பை காவல்துறையின் கவனத்திற்குக் கொண்டு சென்றார். இந்த ஆபத்தான இடி-மின்னல் வேக ஓட்டத்திற்கு காரணமான ஓட்டுநர் மீது ‘ஹிட் அண்ட் ரன்’ மற்றும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து, மிரா பயந்தர் வசாய் விரார் காவல்துறை இந்த விவகாரத்தை போக்குவரத்துப் பிரிவுக்கு மாற்றி, ஆபத்தான முறையில் வாகனத்தை இயக்கிய ஓட்டுநர் மீது சட்டப்படியான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.
