CRIME
“கள்ளக்காதலுக்கு தடையாய் இருந்த கணவன்.. காதலனுடன் மனைவி போட்ட ஸ்கெட்ச்.. ஓடும் ரயிலில் அரங்கேறிய பயங்கரம்.. நெஞ்சை உலுக்கும் பின்னணி”..!!
பீகாரில் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்த அரசு மின்சாரத் துறை தொழில்நுட்ப வல்லுநரான தேவ் குமார் குஞ்சன் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், அவரது மனைவி சமிதா குமாரி, காதலன் அஜித் குமார் மற்றும் கூலிப்படை கொலையாளி தீராஜ் ஆகியோர் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். சுபாலில் மோட்டார் வாகன ஆய்வாளராகப் பணியாற்றி வந்த சமிதா, அரசு தொழில்நுட்ப வல்லுநரான அஜித் குமாருடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். தங்களது காதலுக்குத் தடையாக இருந்த கணவரைக் கொலை செய்ய இருவரும் சதித்திட்டம் தீட்டி, குற்றப் பின்னணி கொண்ட தீராஜ் என்ற கூலிப்படையாளரை நியமித்து ரயிலில் வைத்து குஞ்சனைச் சுட்டுக் கொன்றுள்ளனர்.
கதிஹார் ரயில் காவல் கண்காணிப்பாளர் ஹரி சங்கர் குமார் தலைமையிலான விசாரணையில், காதலன் அஜித் குமார் இந்தச் சதித்திட்டத்தை ஒப்புக் கொண்டுள்ளார். குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட கைபேசிகள் மற்றும் சிம் கார்டுகளைப் பறிமுதல் செய்துள்ள காவல்துறை, இந்தச் சதியில் தொடர்புடைய பிற நபர்களைத் தேடி வருகிறது. கடந்த 2018-ல் திருமணமான குஞ்சன் – சமிதா தம்பதிக்கு ஐந்து வயது மகள் ஒருவர் இருக்கும் நிலையில், கள்ளக்காதல் விவகாரத்திற்காகக் கணவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
