CRIME
“தாம்பத்ய உறவை தவிர்த்த கணவன்”.. விந்தணு பரிசோதனைக்கு மறுத்ததால் மனைவி கொடுத்த செக்மேட்.. அம்பலமான திடுக்கிடும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 30 வயது திருமணமான பெண் ஒருவர், தனது கணவர் திருமண உறவை முழுமைப்படுத்தவில்லை என்றும், வரதட்சணைக் கொடுமைக்கு ஆளாக்கியதாகவும் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். கடந்த 2021 நவம்பர் 19 அன்று லக்னோவில் இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணமான முதல் நாளிலிருந்தே கணவர் உடல்ரீதியான நெருக்கத்தைத் தவிர்த்து வந்ததால், ஏதேனும் உடல்நலப் பிரச்சினை இருந்தால் சிகிச்சை பெறுமாறு மனைவி அறிவுறுத்தியுள்ளார். நிலைமை சரியாகிவிடும் என கணவர் தொடர்ந்து கூறி வந்த நிலையில், இரண்டு ஆண்டுகள் கடந்தும் திருமண உறவில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் சந்தேகமடைந்த மனைவி, கணவரைத் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்ய முயன்றபோது, அவர் விந்தணு மாதிரி பரிசோதனை செய்ய மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து கேள்வி எழுப்பியதால் அந்தப் பெண் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு, வீட்டிலிருந்தும் வெளியேற்றப்பட்டுள்ளார். மேலும், ₹5 லட்சம் வரதட்சணை கொண்டு வராவிட்டால் வீட்டிற்கு வரக்கூடாது என கணவரின் குடும்பத்தினர் மிரட்டியதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் ஜூலை 12 அன்று கணவர், மாமியார், மைத்துனர் உட்பட குடும்ப உறுப்பினர்கள் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
