LATEST NEWS
“அன்னைக்கு திட்டுனீங்க.. இன்னைக்கு கூட்டு சேர்றீங்க” பொதுவேட்பாளராக களமிறங்கும் சீமான்..? அமைச்சர் வன்னி அரசு அதிரடி அட்டாக்..!!
அம்பாசமுத்திரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராகக் களமிறங்கலாம் என்ற தகவல் பரவி வருகிறது. இச்சூழலில், இதுகுறித்து அமைச்சர் வன்னி அரசு மறைமுகமாகத் தனது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். தமிழ் தேசியம் பேசுவதாகக் கூறுபவர்கள் தற்போது தங்களின் சுயலாபத்திற்காகப் பொதுவேட்பாளர் அரசியலைப் பேசுவதாக அவர் சாடியுள்ளார்.
கடந்த காலங்களில் ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை மிகக் கடுமையாக விமர்சித்தவர்கள், இன்று அதே கட்சிகளுடன் இணையும் சூழல் குறித்துப் பேசுவதில்லை என்று வன்னி அரசு குறிப்பிட்டுள்ளார். மேலும், நீண்ட காலமாகத் தொல். திருமாவளவன் மீது வீண் விமர்சனங்களைச் செய்தவர்கள், தற்போது அவர்களுடனேயே இணைந்து செயல்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழகத்தில் உண்மையான அம்பேத்கர், பெரியார் மற்றும் தமிழ் தேசிய இயக்கமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியே செயல்பட்டு வருவதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகல் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதி காலியானது உள்ளிட்ட காரணங்களால் தமிழகத்தில் 7 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சீமான் ஏற்கனவே அம்பாசமுத்திரத்தில் போட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில், அவர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினைச் சமீபத்தில் சந்தித்ததும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. சீமான் பொதுவேட்பாளராகப் போட்டியிடுவது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வராத நிலையில், அமைச்சர் வன்னி அரசின் இந்தக் கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏகபோகமாகப் பற்றவைத்துள்ளன.
