LATEST NEWS
நாங்க பார்க்காத வழக்கா..? செந்தில் பாலாஜி ஏற்கனவே 19 மாதங்கள் சிறையில் இருந்தவர்… எங்களை மிரட்ட முடியாது… ஆர்.எஸ். பாரதி ஆவேச முழக்கம்..!!
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான புதிய வழக்குகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, அவர் ஏற்கனவே 19 மாதங்கள் சிறையில் இருந்தவர் என்பதால் இதுபோன்ற சட்ட நடவடிக்கைகளால் திமுகவை ஒருபோதும் அச்சுறுத்த முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இது போன்ற அரசியல் பழிவாங்கும் வழக்குகளைத் தங்களுக்குப் புதியவை அல்ல என்றும், வழக்குகள் போடுவதன் மூலமாக திமுகவை வீழ்த்திவிடலாம் என்று யாராவது நினைத்தால் அது நடக்காது என்றும் அவர் காரசாரமாகக் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் ரீதியாகத் தங்களை எதிர்கொள்ள முடியாதவர்கள் சட்ட அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டியுள்ள அவர், எந்தவொரு சவாலையும் சட்டரீதியாகச் சந்திக்கத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார். செந்தில் பாலாஜி விவகாரத்தில் நீதிமன்றங்கள் மூலம் அடுத்தடுத்து வரும் சவால்களைத் திமுகவின் சட்டக் குழு திறம்பட எதிர்கொண்டு, இறுதியில் சட்டப் போராட்டத்தில் தங்களுக்குத்தான் வெற்றி கிடைக்கும் என்றும் ஆர்.எஸ். பாரதி தனது பேட்டியில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
