LATEST NEWS
அட யாருப்பா இவரு..? எமனுக்கே சவால் விட்ட தாத்தா… தண்டவாளத்தில் கட்டில் போட்டு தூக்கம்… ரயில் ஹார்ன் அடித்ததும் அசால்ட்டாக வழிவிட்ட பகீர் வீடியோ..!!
ரயில் தண்டவாளத்தின் குறுக்கே கட்டிலைப் போட்டுத் தூங்கிய முதியவர் ஒருவரின் அதிர்ச்சியூட்டும் செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ரயில் வரும் சத்தம் கேட்டு, ஹார்ன் ஒலித்த பிறகே நிதானமாக எழுந்த அந்த முதியவர், தனது கட்டிலை அங்கிருந்து நகர்த்தி ரயிலுக்கு வழி விட்டுள்ளார். இந்த அதீத துணிச்சலா அல்லது அலட்சியமா என்று பார்ப்பவர்களை அதிர வைக்கும் வகையில் அந்த முதியவரின் செயல் அமைந்துள்ளது.
https://twitter.com/Namita62307261/status/2084907049587195950/video/1
இதுபோன்ற விபரீதமான செயல்கள் எந்த நேரத்திலும் பெரிய விபத்தில் போய் முடியலாம் என்பதால், இது கடுமையான அலட்சியமா அல்லது சமூக வலைத்தளங்களுக்காகச் செய்யப்பட்ட ஆபத்தான ஸ்டண்ட்டா (Stunt) என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரு நொடித் தாமதமும் பெரும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடும் என்பதால், பொதுமக்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் இதுபோன்ற செயல்களைப் பலரும் சமூக வலைத்தளங்களில் வன்மையாகக் கண்டித்து வருகின்றனர்.
