LATEST NEWS
“கர்மா யாரையும் சும்மா விடாது..!” பூனையை எட்டி உதைத்த பெண்ணிற்கு சில நொடிகளில் நடந்த திக் திக் சம்பவம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!
நாம் செய்யும் செயல்களின் பலன் நமக்கே திரும்பி வரும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்த ஒரு பெண், தன் அருகில் வந்த பூனையை இரக்கமின்றித் தன் காலால் எட்டி உதைக்கிறார். பாவம் அந்தப் பூனை அங்கிருந்து நகர்ந்து செல்கிறது. ஆனால், அந்தப் பெண் செய்த அந்தத் தவறான செயலுக்கான பலன், அடுத்த சில நொடிகளிலேயே அவருக்குக் கிடைத்தது.
ये तुम्हारे कर्म है जो लौट कर आते है
इस महिला को देखिये आराम भी सो रही है बिल्ली को लात मार कर जाती है
अगले पल जैसे ही सीड़ी चढ़ना शुरु करती है उसका पैर फिसलता है और गिर जाती है
जो दूसरे के लिए खाई खोदता है वो स्वयं ही उस खाई मे गिरता है pic.twitter.com/sHcqLJrVq0— Mohd. Arif (@MohdArif396) August 6, 2026
பூனையை உதைத்த அடுத்த கணமே, அந்தப் பெண் மாடிப்படிகளில் ஏறத் தொடங்குகிறார். எதிர்பாராதவிதமாக அவரது கால் நழுவி, அவர் படிகளில் இருந்து கீழே விழுந்து காயமடைந்தார். ” பிறருக்குக் குழி தோண்டுபவன் தானே அதில் விழுவான்” என்ற பழமொழிக்கு ஏற்ப, காரணமின்றி ஒரு உயிரை துன்புறுத்திய அந்தப் பெண்ணிற்கு உடனடி தண்டனை கிடைத்துள்ளதாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
