CRIME
“போன உயிர் திரும்ப வந்துருச்சு..!” அசுர வேகத்தில் வந்த வெள்ளம்.. பள்ளிப் பையைத் தூக்கிட்டு காட்டுக்குள் ஓடிய 8 வயது சிறுவன்… அங்கே நடந்த நெகிழ்ச்சி ட்விஸ்ட்.. தாய்க்கு நடந்த அந்த ‘அற்புதம்’ சம்பவம்..!!
நேபாளத்தில் ஏற்பட்ட கொடூரப் பெருவெள்ளத்தின் போது ராசுவா மாவட்டத்தைச் சேர்ந்த சோயல் என்ற 8 வயது பள்ளிச் சிறுவன், சீறிப்பாய்ந்த வெள்ள நீரிலிருந்து தப்பிக்கக் காட்டுக்குள் ஓடி மரத்தில் ஏறி அற்புதம் நிறைந்த முறையில் உயிர் தப்பிய நெஞ்சை உலுக்கும் நெகிழ்ச்சிச் சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. லாங்டாங்லிருங் மலையின் அருகே திடீரெனப் பனிப்பாறை சரிந்து, பூகம்பம் போன்ற அசுர சத்தத்துடன் சேறும் சகதியுமான வெள்ள நீர் பள்ளத்தாக்கு முழுவதையும் சூழ்ந்த ‘அந்த’ ஒற்றை நொடிக் காரிருளில், பள்ளி வாகனத்தில் சென்று கொண்டிருந்த இச்சிறுவன் தனது நண்பனுடன் காட்டுக்குள் ஓடியுள்ளான். வெள்ளத்தின் பிடியில் இருந்து தப்பிக்க மரத்தில் ஏறிய போது அவனுக்குக் காலில் எலும்பு முறிவும், முகத்தில் பலத்த காயங்களும் ஏற்பட்ட போதிலும், அசைக்க முடியாத மன உறுதியுடன் பல மணி நேரம் மரத்தின் உச்சியிலேயே தஞ்சமடைந்து தனது உயிரைப் பாதுகாத்துக் கொண்டுள்ளான்.
தங்களது இரு மகன்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்திருக்கலாம் என எண்ணிக் கண்ணீர் மல்கத் தங்குமிடங்களில் தேடி அலைந்த தாய் மாட்டி மாயா தமாங், பல மணி நேரத் தேடலுக்குப் பிறகு தனது இளைய மகன் உயிரோடு மீட்கப்பட்டதைக் கண்டு போன உயிர் திரும்ப வந்தது போல் நெகிழ்ந்துள்ளார். மரத்திலிருந்து பத்திரமாக மீட்கப்பட்ட சிறுவன், ஹெலிகாப்டர் மூலம் நுவாகோட் மாவட்ட மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டுத் தற்போது தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். நேபாளப் பேரழிவில் ராசுவா, நுவாகோட் உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் குறைந்தது 17,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
