CRIME
“இப்போதே வந்துவிடுகிறேன்..!” காதலியைக் கொன்றுவிட்டு காதலன் எடுத்த விபரீத முடிவு.. அறைக்குள் காத்திருந்த பேர அதிர்ச்சி.. நெஞ்சை உலுக்கும் கொடூரம்..!!
ஹரியானா மாநிலம் ரோஹ்தக்கில் உள்ள டெல்லி சாலையில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில், ரூபி என்ற திருமணமான பெண் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், ரூபிக்கும் ரோஹ்தக் பகுதியைச் சேர்ந்த நீரஜ் என்ற வாலிபருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது. இவர்களுக்குத் திருமணமாகியும் இந்த உறவு நீடித்த சூழலில், கடந்த புதன்கிழமை காலை இருவரும் ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கியுள்ளனர். அங்கு அவர்களுக்குள் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தின் போது அநாகரிக அராஜக உச்சக்கட்ட ஆத்திரமடைந்த நீரஜ், ரூபியின் கழுத்திலிருந்த துப்பட்டாவைப் பயன்படுத்தி அவரை கொடூரமாகக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.
கொலையை அரங்கேற்றிய பின் ஹோட்டல் ஊழியர்களிடம் “இப்போதே வந்துவிடுகிறேன்” என்று கூறிவிட்டுத் தப்பியோடிய நீரஜ், தனது வீட்டிற்குச் சென்று தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உயிருக்குப் போராடிய அவரை மீட்ட உறவினர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது அவர் வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து ரோஹ்தக் லோக்கல் எஸ்.எச்.ஓ மகேந்திர சிங் தலைமையில் போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து, ஹோட்டலின் சிசிடிவி காட்சிகள் மற்றும் இதர சான்றுகளைக் கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நீரஜின் உடல்நிலை சீரானதும் அவர் அதிகாரப்பூர்வமாகக் கைது செய்யப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
