இந்த காலத்துல இபப்டியொரு மனுஷனா..? ரயிலில் இருந்து எதையோ தூக்கி வீசிய நபர்… உண்மை தெரிந்து நெகிழ்ந்து போன இணையவாசிகள்… மனதைத் தொடும் வைரல் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இந்த காலத்துல இபப்டியொரு மனுஷனா..? ரயிலில் இருந்து எதையோ தூக்கி வீசிய நபர்… உண்மை தெரிந்து நெகிழ்ந்து போன இணையவாசிகள்… மனதைத் தொடும் வைரல் வீடியோ..!!

Published

on

மரம், செடி, கொடிகளின் முக்கியத்துவத்தைப் பற்றி யாருக்கும் விவரிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், ஒருபுறம் வளர்ச்சியின் பெயரால் மரங்கள் வெட்டப்பட்டு வரும் நிலையில், மறுபுறம் சில மனிதர்கள் அவற்றை மீண்டும் வளர்க்க வேண்டும் என்ற உறுதியோடு செயல்பட்டு வருகின்றனர். ‘டவுன் டு எர்த்’ அறிக்கையின்படி, ஜூலை 2023 முதல் மே 2026 வரையிலான காலகட்டத்தில் சுமார் 28 லட்சம் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன அல்லது அதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளன. இத்தகைய சூழ்நிலையில் இயற்கைக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு, ரயில் பயணத்தின் போது விதைகள் தூவி புதிய மரங்களை உருவாக்க முயலும் ஒரு நபரின் ஊக்கமளிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மழைக்காலத்தில் விதைகள் முளைக்கச் சிறந்த சூழல் நிலவுவதால், அந்த நபர் ரயில் பயணத்தின் போது வெளியேயுள்ள தரிசு நிலங்களில் விதைகளை வீசி எறிகிறார். ‘vetha valli’ என்ற எக்ஸ் பயனர் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில், ரயிலின் கதவு அருகே அமர்ந்திருக்கும் ஒரு நபர், தன் வசமுள்ள விதைகளை வெளியே தூவிக்கொண்டே செல்வதைக் காண முடிகிறது. இத்தகைய முயற்சியால் தொலைதூரத்தில் உள்ள மனித நடமாட்டம் இல்லாத தரிசுப் பகுதிகளுக்கும் விதைகள் சென்றடைந்து இயற்கை வளர வாய்ப்பு ஏற்படுகிறது.

Advertisement

இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள் பலரும் அந்த நபரின் நற்செயலைப் பாராட்டி வருகின்றனர். “நாங்களும் ரயிலில் பயணம் செய்யும்போது பொருள்களை வெளியே வீசுகிறோம், ஆனால் அவை குப்பைகள்; இவர் விதை தூவுகிறார்” என்று ஒரு பயனர் பதிவிட்டுள்ளார். வளர்ச்சியின் பெயரால் மரங்கள் அழிக்கப்பட்டு வரும் இந்தக் காலத்தில், இயற்கையைக் காக்க இத்தகைய மனிதர்களின் பங்களிப்பும் விழிப்புணர்வும் மிகவும் அவசியமானது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in