LATEST NEWS
“ஐயோ.. காக்கிச் சட்டைக்கே இந்த நிலையா..?” நடுரோட்டில் சப்-இன்ஸ்பெக்டர் நேர்ந்த கொடூரம்.. இளைஞனின் வெறிச்செயலால் பதைபதைத்துப்போன பொதுமக்கள்.. இணையத்தில் வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!
உத்தரப்பிரதேச மாநிலம் தலைநகர் லக்னோவில் உள்ள பாரா பகுதியில், மாநகராட்சி மற்றும் காவல்துறை குழுவினர் ஆக்கிரமிப்புகளை அகற்றச் சென்றபோது திடீர் மோதல் வெடித்தது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின்போது அங்கிருந்த கும்பல் திடீரென அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியது. அப்போது ஒரு இளைஞன் உதவி ஆய்வாளரைத் தரையில் தள்ளி, அவரது கழுத்தை நெரித்துத் தாக்கத் தொடங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
राजधानी लखनऊ में दारोगा की पिटाई…
पारा इलाके में अतिक्रमण हटाने गई नगर निगम और पुलिस की टीम कई लोगों ने हमला बोला दिया। एक युवक ने दारोगा को जमीन पर पटक दिया और गला दबा का मारा। जब साथी पुलिस वाले ने वीडियो बनाने लगे तो वहां मौजूद महिला विक्टिम कार्ड खेलने लगी, उलटे पुलिस… pic.twitter.com/1HgkTR7MOC— Ashish Paswan (@ashishpaswan0) August 18, 2026
இதற்கிடையில், இந்த வன்முறையை உடன் இருந்த சக காவல்துறை அதிகாரிகள் சிலர் வீடியோ பதிவு செய்யத் தொடங்கினர். அதைக் கண்ட அங்குள்ள பெண் ஒருவர், தான் ஏதோ பாதிக்கப்பட்டவரைப் போல நாடகமாடி, காவல்துறையினர் மீதே பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறத் தொடங்கினார். அதிகாரிகளைத் தாக்கியதுடன் நாடகமாடிய இச்சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
