CRIME
கல்நெஞ்சக்காரி..!”அந்த கோலத்தை பார்த்து அம்மா என அலறிய குழந்தை” நள்ளிரவில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவன் கொலை… 4 வயசு குழந்தையையும் விட்டு வைக்கல… பெங்களூருவை உலுக்கிய கொடூர இரட்டைக்கொலை..!!
பெங்களூருவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள சிக்கபானவரா, குட்டே பசவேஸ்வர நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் அவரது 4 வயது மகனும் வீட்டுக்குள்ளேயே கொடூரமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்கள் 34 வயதான அபினந்தன் மற்றும் அவரது 4 வயது மகன் யதுவீர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆரம்பத்தில் இது சந்தேகத்திற்கிடமான மரணமாகக் கருதப்பட்ட நிலையில், போலீசாரின் தீவிர விசாரணையில் இது திட்டமிட்ட இரட்டைக் கொலைச் சதி என்பது தெரியவந்துள்ளது.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையின்படி, சம்பவத்தன்று இரவில் கணவன் அபினந்தன் மற்றும் மனைவி ஹரிணி இடையே தூங்கும் ஏற்பாடு தொடர்பாக பலத்த வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஹரிணி, சமையலறை கரண்டியால் அபினந்தனைத் தாக்கியுள்ளார். அதன் பின்னர், ஹரிணி தனக்கு நெருக்கமான வினய் என்ற நபரைத் தனது வீட்டுக்கு வரவழைத்துள்ளார். இவர்கள் இருவருமாகச் சேர்ந்து அபினந்தனை மிகக் கொடூரமாகத் தாக்கி கொலை செய்ததாகப் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இந்த கொடூரச் சம்பவத்தின் போது, தூங்கிக் கொண்டிருந்த 4 வயது குழந்தை யதுவீர் திடீரென விழித்தெழுந்ததாகக் கூறப்படுகிறது. தங்களின் கொலைக் குற்றத்தை மறைப்பதற்காக, அந்தக் குழந்தையையும் அவர்கள் மூச்சுத்திணறடித்துக் கொலை செய்துள்ளனர். குற்றத்தைத் திட்டமிட்டு மறைக்க வீட்டில் இருந்த ரத்தக் கறைகள் துடைத்துச் சுத்தம் செய்யப்பட்டுள்ளதுடன், கண்காணிப்பு கேமராக்களும் செயலிழக்க வைக்கப்பட்டுள்ளன. அபினந்தனின் தாயார் அளித்த புகாரின் பேரில் தப்பியோடிய முக்கிய குற்றவாளியான வினயைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
