LATEST NEWS
“நாலு பேரு என்ன சொல்லுவாங்க” அமெரிக்காவில் ‘அந்த நாலு பேர்’ இல்லையா..? இந்தியரை வியக்க வைத்த அமெரிக்க திருமண ரகசியம்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!!
அமெரிக்காவில் வாழும் ராஜன் சிங் என்ற இந்தியர், அங்குள்ள திருமண கலாச்சாரம் இந்தியாவிலிருந்து எவ்வளவு மாறுபட்டது என்பதை விளக்கி இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் திருமணம் என்பது முற்றிலும் தனிப்பட்ட விஷயமாகக் கருதப்படுகிறது. இந்தியாவைப் போலப் பெற்றோரோ அல்லது உறவினர்களோ மணமகன் அல்லது மணமகளைத் தேடும் படலம் அங்கு இல்லை என்றும், உறவினர்களின் தலையீடோ அல்லது அக்கம் பக்கத்தினரின் வதந்திகளோ அங்கு இருக்காது என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க திருமணங்களில் வரதட்சணை கொடுக்கும் வழக்கம் முற்றிலும் கிடையாது. அங்கு திருமணம் செய்து கொள்ளும் ஜோடிகள், திருமணத்திற்கு முன்பாகவே தங்களுக்கான தனி வீட்டைத் தாங்களாகவே உழைத்து உருவாக்கி விடுகிறார்கள். மேலும், அங்கு ‘சுகுரால’ (மாமியார் வீடு அல்லது புகுந்த வீடு) என்ற அமைப்பே இல்லை என்றும், திருமணத்திற்குப் பிறகு பெண் தனது கணவனுடன் சேர்ந்து வாங்கிய புதிய வீட்டிற்குத்தான் நேரடியாகச் செல்கிறார் என்றும் ராஜன் சிங் விளக்கியுள்ளார்.
https://www.instagram.com/reel/DZ8yvyQB0cq/?utm_source=ig_web_button_share_sheet
இந்த வீடியோவை நெட்டிசன்கள் பலரும் வியப்புடன் பகிர்ந்து தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். இந்தியத் திருமணங்களில் உள்ள ஆடம்பர பகட்டுகள் மற்றும் வீண் நுகர்வு கலாச்சாரம் அமெரிக்காவில் இல்லை என்பது நல்ல விஷயம் எனச் சிலர் பாராட்டியுள்ளனர். அதே வேளையில், இந்திய சமூகத்தில் நாம் அதிகம் கவலைப்படும் “அந்த நாலு பேர் என்ன சொல்வார்களோ?” என்ற சூழல் அமெரிக்காவில் இல்லையா என்றும் பல பயனர்கள் வேடிக்கையாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
