LATEST NEWS
“ஏழைங்க பாழைங்க நினைச்சுப்புட்டா நாளைக்கு நீங்களும் சிஎம்முதான் ” பாடல் வரியால் பரவசம்… பேரவையில் தமிழக முதலமைச்சர் விஜய்யின் தாய்க்கு தவெக எம்.எல்.ஏ நன்றி..!!
தமிழக சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர் தாஹிரா, முதலமைச்சர் விஜய்யைப் புகழ்ந்து நெகிழ்ச்சியுடன் பேசினார். அப்போது முதலமைச்சரின் தாயார் ஷோபா சந்திரசேகருக்கு அவர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
தனது உரையின் போது, விஜய் நடிப்பில் வெளியான ‘சிவகாசி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘கோடம்பாக்கம் ஏரியா’ பாடலின் வரிகளை அவர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, “ஏழைங்க பாழைங்க நினைச்சுப்புட்டா நாளைக்கு நீங்களும் சிஎம்முதான் ” என்ற பாடல் வரியைக் குறிப்பிட்டுப் பேசினார்.
அந்தத் தீர்க்கதரிசனமான பாடலைப் பாடி, தமிழகத்திற்கு ஒரு சிறந்த முதலமைச்சரைத் தந்த பெருமைக்காக அவரது தாய் ஷோபாவுக்கு இந்த நல்வேளையில் நன்றி கூறுவதாக சட்டமன்ற உறுப்பினர் தாஹிரா பேரவையில் நெகிழ்ந்து கூறினார்.
