LATEST NEWS
“மின் கட்டணத்தைக் குறைக்கக் கேட்டதற்குத் துப்பாக்கித் தோட்டாவா..?!” 26 ஆண்டுகளுக்கு முன் சந்திரபாபு அரசு செய்த அந்த கொடூரம்.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!
ஆந்திரப் பிரதேசத்தில் மின் கட்டண உயர்வுக்கு எதிராகப் போராடியவர்கள் மீது நடத்தப்பட்ட பாஷீர் பாக் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்து இன்றோடு 26 ஆண்டுகள் நிறைவடைகின்றன. கடந்த 2000-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 அன்று, ஹைதராபாத்தின் பாஷீர் பாக் பகுதியில் அப்போதைய என். சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி அரசுக்கு எதிராக, மின் கட்டண உயர்வு மற்றும் மின்சாரத் துறை சீர்திருத்தங்களை வாபஸ் பெறக் கோரி எதிர்க்கட்சிகள் மற்றும் இடதுசாரிகள் சார்பில் ‘சலோ அசெம்பிளி’ பேரணி நடத்தப்பட்டது. அப்போது போராட்டக்காரர்களை ஒடுக்க அரசு உத்தரவின் பேரில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ராமகிருஷ்ணா, விஷ்ணுவர்தன் ரெட்டி மற்றும் பாலசுவாமி ஆகிய மூன்று போராட்டக்காரர்கள் கொடூரமாகச் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
https://twitter.com/AmbedkarG009/status/2093166792206369079/video/1
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பாஷீர் பாக் படுகொலைச் சம்பவம்தான், அதுவரை மந்தமாக இருந்த தனித் தெலுங்கானா மாநில உருவாக்க இயக்கத்திற்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்து அதனை மேலும் வலுப்படுத்தியது. சந்திரபாபு நாயுடு அரசின் இந்த அநாகரிக அராஜக ஒடுக்குமுறை மற்றும் தெலுங்கானா பிராந்தியத்தின் விவசாயத் தேவைகள் புறக்கணிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த கே. சந்திரசேகர் ராவ், தனது தெலுங்கு தேசம் கட்சிப் பதவிகளைத் துறந்து வெளியேறினார். அதனைத் தொடர்ந்து, தெலுங்கானா ராஷ்டிர சமிதி என்ற புதிய கட்சியைத் தொடங்கி, தனி மாநிலத்திற்கான வரலாற்றுப் போராட்டப் பாதையை அவர் கையில் எடுத்தார்
