LATEST NEWS
இதை யாருமே எதிர்பார்க்கலையே..! இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக திட்டம்..? உதயநிதி திடீர் அப்செட் … பரபரக்கும் அரசியல் களம்..!!
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் தவெக-வை வீழ்த்துவதற்காக, அதிமுக-வுக்கு வழிவிட்டுத் தேர்தலைப் புறக்கணிக்க திமுக தலைமை ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மும்முனைப் போட்டி ஏற்படும் பட்சத்தில், ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகள் பிரிந்து இறுதியாகத் தவெக எளிதில் வெற்றி பெற்றுவிடும் என்பதால், அதனைத் தடுக்கவே திமுக இந்த அரசியல் வியூகத்தைக் கையாள்வதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், தேர்தல் களத்திலிருந்து அதிகாரப்பூர்வமாகப் பின்வாங்கினால் அது கட்சிக்கு மிகப்பெரிய அரசியல் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால், இம்முடிவில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு உடன்பாடில்லை எனக் கூறப்படுகிறது. தலைமை எடுக்க நினைக்கும் இந்தத் தேர்தல் புறக்கணிப்பு முடிவால் உதயநிதி ஸ்டாலின் கடுமையான அப்செட்டில் இருப்பதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் ஆளும் தவெக-வை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு முக்கிய திராவிடக் கட்சிகளும் பல்வேறு அரசியல் கணக்குகளைப் போட்டு வரும் வேளையில், இந்தத் தேர்தல் புறக்கணிப்புத் தகவல் தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் விவாதங்களையும் கிளப்பியுள்ளது.
