LATEST NEWS
“நெஞ்சை உலுக்கும் அராஜகம்.. வீட்டின் மீது 5 முறை ஏறிய பொலிரோ கார்..” இடிபாடுகளுக்குள் 75 வயது பாட்டி நேர்ந்த விபரீதம்.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!
மகாராஷ்டிர மாநிலம் அகோலா மாவட்டத்தில், நிலத் தகராறு காரணமாகப் பொலிரோ பிக்கப் வாகனம் ஒன்றை ஒரு வீட்டின் மீது மீண்டும் மீண்டும் மோதவிட்டு, அந்த வீட்டைத் தரைமட்டமாக்கிய கொடூரச் சம்பவத்தில் 75 வயது முதிய பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சட்டத்தின் வழியைப் புறக்கணித்து, தங்களின் சொந்த ஆத்திரத்தைத் தீர்ப்பதற்காக வன்முறையைக் கையில் எடுத்த குற்றவாளிகள், அந்த வீட்டின் மீது அடுத்தடுத்து 4 முதல் 5 முறை வாகனத்தை மிக வேகமாக மோதவிட்டுள்ளனர். இந்த மனிதாபிமானமற்ற கொடூரத் தாக்குதலின் போது வீட்டிற்குள் இருந்த சோனாபாய் மகாராம் ஜாதவ் (75) என்ற முதியவர் இடிபாடுகளுக்குள் நசுங்கி உயிரிழந்ததோடு, வீட்டிலிருந்த மேலும் சிலரும் பலத்த காயமடைந்துள்ளனர்.
நிலம் இருந்த இடத்திலேயேதான் இருக்கிறது; ஆனால் மனிதர்களின் தறிகெட்ட ஆத்திரமும் கோபமும் ஒரு அழகான குடும்பத்தின் வாழ்விடத்தையே தரைமட்டமாக்கி, ஒரு உயிரையும் பறித்துள்ளது. இந்த வன்முறைச் சம்பவம் ஜம்வாசு கிராம மக்களிடையே பெரும் பீதியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தத் துணிகரத் தாக்குதல் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், இதற்குத் தூண்டுகோலாக இருந்தவர்கள் யார் என்பது குறித்தும், தப்பியோடிய குற்றவாளிகள் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
