LATEST NEWS
BREAKING: லண்டனில் இருந்து சில்வர்ஸ்டோன் மைதானத்திற்குப் புறப்பட்ட முதல்வர் விஜய்..!!!
லண்டன் நகருக்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான சி. ஜோசப் விஜய், அங்குள்ள புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் கார் பந்தய மைதானத்திற்குப் புறப்பட்டுள்ளார். சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான இங்கிலாந்தின் இந்த மைதானத்தில் நடைபெறவுள்ள மாபெரும் கார் பந்தயப் போட்டியைமுதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு கொடியசைத்துத் தொடங்கி வைப்பதற்காக அவர் லண்டனில் இருந்து அங்கு விரைந்துள்ளார்.
தமிழ்நாட்டின் இரு மாபெரும் ஆளுமைகளான விஜய் மற்றும் அஜித் ஆகிய இருவரின் ரசிகர்கள் மத்தியிலும் இந்த லண்டன் விசிட் தற்பொழுது மாபெரும் எதிர்பார்ப்பையும் கொண்டாட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கார் பந்தயத் தொடரில் முன்னணித் தமிழ் திரை நட்சத்திரமான அஜித்குமார் ஒரு தொழில்முறை பந்தய வீரராகப் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
