LATEST NEWS
“தங்கைனு சொல்லி ராக்கி கட்ட வச்சிட்டு முத்தம் தர்றியா?” கோரக்பூரில் லீலைகளில் ஈடுபட்ட கம்ப்யூட்டர் கிளாஸ் மாஸ்டருக்கு தர்மஅடி.. ஸ்பெஷல் கிளாஸ்ன்னு வர சொல்லி நடந்த லீலைகள்..!!!
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் கணினி பயிற்சி மைய மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட ஆசிரியர் ஜகதீஷ் சௌராசியா என்பவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். கூடுதல் வகுப்பு என்ற பெயரில் வழக்கமான நேரம் முடிந்த பிறகும் அந்த மாணவியைத் தனியாக இருக்க வைத்து, அவர் முத்தம் கொடுத்து அத்துமீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வகுப்பறைக்குள் திடீரென நுழைந்த மாணவியின் சகோதரர் மற்றும் அவரது நண்பர்கள், ஆசிரியரின் இந்த அநாகரிகச் செயலைக் கண்டு அதிர்ச்சியடைந்து அவரை அங்கேயே தர்மஅடி கொடுத்துக் கேள்வி எழுப்பியுள்ளனர். அந்தப் பயிற்சி மையத்தில் நடைபெற்ற இந்த மோதல் மற்றும் வாக்குவாதம் தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் வைரலானது.
மாணவியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், இந்தச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிடிபட்ட ஆசிரியர், “அவள் என் தங்கை போன்றவள், எனக்கு ராக்கி கூட கட்டினாள்” என்று கூறித் தப்பிக்க முயன்ற போதிலும், வைரல் வீடியோவை ஆதாரமாகக் கொண்டு போலீசார் அவரைச் சிறையில் அடைத்துள்ளனர்.
