LATEST NEWS
“பகல்ல படிப்பு… ராத்திரியில பெட்ரோல் பங்க் வேலை… ” இவனைப் பார்த்து கத்துக்கோங்க… காவலரையே வியக்க வைத்த BBA மாணவன்..! இணையத்தைக் கலக்கும் ஊக்கமளிக்கும் வீடியோ..!!
பொதுவாகப் படிப்பதற்கு வசதியான அறை, வெளிச்சம், மேஜை, நாற்காலி மற்றும் விசிறி போன்றவை தேவைப்படும் என்றும், அப்போதுதான் மாணவர்கள் மனதை ஒருமுகப்படுத்திப் படிக்க முடியும் என்றும் நினைக்கிறோம். ஆனால் இது அனைவருக்கும் பொருந்துவதில்லை. சில இளைஞர்கள் தங்களுக்குக் கிடைக்கும் எந்தவொரு சூழலையும் பொருட்படுத்தாமல், படிக்கும் பேரார்வத்தால் சாதனைகளைப் படைக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு இளைஞனின் வீடியோ இணையத்தில் வைரலாகி, பலருக்கும் பெரும் ஊக்கமளித்து வருகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் இந்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. இரவு நேரத்தில் அங்கே ரோந்து சென்ற சப்-இன்ஸ்பெக்டர் ரோஹித் சாஹு, பெட்ரோல் பங்க்கில் வேலை பார்த்தபடியே கையில் புத்தகத்துடன் படித்துக் கொண்டிருந்த ஒரு இளைஞனைக் கண்டு வியப்படைந்தார். உடனே அவர் அந்த இளைஞனிடம் சென்று “என்ன படிக்கிறாய்?” என்று விசாரிக்க, அந்த இளைஞன் தான் பி.பி.ஏ படித்து வருவதாகவும், பகலில் படித்துவிட்டு இரவில் இங்கு வேலை செய்து வருவதாகவும் கூறினான்.
https://www.instagram.com/reel/DbP4UrsvaRd/?utm_source=ig_web_button_share_sheet
அந்த இளைஞனின் உழைப்பையும் படிக்கும் ஆர்வத்தையும் கண்டு வியந்த காவலர் ரோஹித் சாஹு, “இப்படித் தொடர்ந்து கடுமையாக உழைத்துப்படி, நிச்சயமாக வாழ்வில் வெற்றி பெறுவாய்” என்று வாழ்த்தி அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். இந்த வீடியோவைக் கண்ட இணையவாசிகள் பலரும் அந்த இளைஞனுக்கு வாழ்த்துகளையும் ஆசிகளையும் வழங்கி வருகின்றனர். பலர் வெறும் மொபைல் போன்களிலேயே நேரத்தைச் செலவிடும் இக்காலத்தில், இந்த இளைஞனிடமிருந்து நாம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர்.
