CRIME
“அடக்கடவுளே.. தங்கையுடன் வீட்டில் நெருக்கமாக இருந்த காதலன்..” ‘அந்த’ கோலத்தில் பார்த்த 4 சகோதரர்கள் செய்த கொடூர காரியம்.. இணையத்தை உலுக்கும் வைரல் வீடியோ..!!
தனது சகோதரியுடன் வீட்டில் இருந்ததைக் கண்டு ஆத்திரமடைந்த நான்கு உடன்பிறந்த சகோதரர்கள், அந்த இளைஞனை அடித்து இழுத்துச் சென்று ஆற்றில் மூழ்கடித்துக் கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இளம்பெண் ஒருவர் வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் தனது காதலனை வீட்டிற்கு அழைத்ததாகக் கூறப்படுகிறது. அந்தச் சமயத்தில் எதிர்பாராதவிதமாக வீட்டிற்கு வந்த அவரது நான்கு சகோதரர்களும், காதலர்கள் இருவரும் நெருக்கமாக இருந்ததைக் கண்டு கடும் ஆத்திரமடைந்துள்ளனர். இதனால் ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்ற சகோதரர்கள், அந்த இளைஞனைத் தடியால் அடித்துத் துன்புறுத்தியதோடு நில்லாமல், குண்டுக்கட்டாகத் தூக்கி அருகில் இருந்த ஆற்றங்கரைக்கு இழுத்துச் சென்றுள்ளனர்.
ஆற்றங்கரைக்குக் கொண்டு செல்லப்பட்ட அந்த இளைஞனை, சகோதரர்கள் நால்வரும் சேர்ந்து ஆற்றில் அமுக்கி மூழ்கடித்ததாகக் கடுமையான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த இளைஞன் தண்ணீருக்குள் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்ததை உறுதி செய்த பின்னரே, அவர்கள் அனைவரும் வீட்டிற்குத் திரும்பியுள்ளனர். இந்தச் சம்பவத்தின் அதிர்ச்சியூட்டும் திருப்பம் என்னவென்றால், தனது சகோதரர்கள் காதலனுக்கு என்ன செய்தார்கள் என்ற விபரம் இன்னும் அந்த இளம்பெண்ணுக்குத் தெரியவில்லை என்று கூறப்படுகிறது. கௌரவக் கொலைக் கோணத்தில் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தப்பியோடிய நான்கு சகோதரர்களையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
