LATEST NEWS
நெஞ்சை நடுங்க வைக்கும் காட்சி… அதிவேக கார் மோதி 3 அடி தூக்கி வீசப்பட்ட வாலிபர்.. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த கொடூரம்…!!
கிரேட்டர் நொய்டா பிசரக் காவல் எல்லைக்குட்பட்ட மூர்த்தி சௌக்கில் நடந்த சாலை விபத்தின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், சாலையைக் கடக்க முயன்ற ஒரு வாலிபர் மீது அதிவேகமாக வந்த கார் ஒன்று பலமாக மோதும் காட்சி பதிவாகியுள்ளது. இந்த மோதலின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்ததால், அந்த வாலிபர் காற்றில் சுமார் 3 அடி உயரத்திற்கு தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தார். இந்த விபத்தில் வாலிபர் படுகாயமடைந்த நிலையில், வீடியோவை அடிப்படையாகக் கொண்டு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, காரை ஓட்டிவந்த ஓட்டுநரைக் கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட வாலிபர் பிசரக் காவல் எல்லைக்குட்பட்ட வைத்புரா கிராமத்தைச் சேர்ந்த ஹிமான்ஷு என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த விபத்து செப்டம்பர் 5-ஆம் தேதி அதிகாலை சுமார் 4:30 மணியளவில் நடந்துள்ளது. வாலிபர் இரவுக் காவல் பணியை முடித்துவிட்டு அதிகாலையில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, சாலையைக் கடப்பதற்காக மூர்த்தி சௌக் அருகே வந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த அதிவேக டாடா பஞ்ச் கார் அவர் மீது பலமாக மோதியுள்ளது. இதில் ஹிமான்ஷுவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதோடு, கை மற்றும் கால்களில் முறிவு ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திலிருந்தவர்கள் அவரை உடனடியாக கிரேட்டர் நொய்டா வெஸ்டில் உள்ள யதார்த் மருத்துவமனையில் அனுமதித்தனர்; அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\
https://www.instagram.com/reel/DdULBA-PWji/?utm_source=ig_web_button_share_sheet
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், காரின் வேகம் அதிகமாக இருந்ததாலும், சாலையைக் கடந்த வாலிபரை ஓட்டுநர் சரியான நேரத்தில் கவனிக்காததாலும் இந்த விபத்து நிகழ்ந்தது தெரியவந்துள்ளது. விபத்து நடந்ததும் ஓட்டுநர் காரை நிறுத்தாமல் தப்பிச் சென்றுள்ளார். குடும்பத்தினரின் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து காரையும் அதன் ஓட்டுநரையும் கண்டறிந்தனர். காவல் நிலைய ஆய்வாளர் ரஞ்சீத் சிங் தெரிவி கூறுகையில், குற்றவாளியான ஓட்டுநர் கைது செய்யப்பட்டு, விபத்துக்குப் பயன்படுத்தப்பட்ட டாடா பஞ்ச் காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
