LATEST NEWS
“என் சாவுக்கு யாரும் காரணம் அல்ல” எனக்கு அதுதான் பிரச்னை… மாடியிலிருந்து குதித்து 10 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை… சிக்கிய பரபரப்பு கடிதம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில், 10-ஆம் வகுப்பு படித்து வந்த ஷனாயா பிஷ்ட் என்ற மாணவி, 15-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், அவரது அறையில் இருந்து உருக்கமான தற்கொலை கடிதம் ஒன்றையும் மீட்டுள்ளனர்.
அந்தத் தற்கொலை கடிதத்தில், படிப்பின் காரணமாக தனக்கு ஏற்பட்ட அழுத்தமே இந்த முடிவிற்கு காரணம் என்றும், இதற்கு வேறு யாரும் பொறுப்பல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது பெற்றோர் மீது தான் கொண்டுள்ள அன்பையும், தனது சகோதரியின் எதிர்காலத்தை நன்றாக கவனித்துக் கொள்ளுமாறும் அக்கடிதத்தில் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்துறையினர் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர்களிடையே அதிகரித்து வரும் படிப்பு அழுத்தம் மற்றும் மன உளைச்சல் ஆகியவை தற்கால சூழலில் முக்கிய கவனத்திற்குரியதாக மாறியுள்ளன.
