CRIME
“நெஞ்சை உலுக்கும் கொடூரம்..” 14 வயது சிறுமியை கழிவறையில் வன்கொடுமை செய்த திருநங்கை போலீஸ்… பின்னணியில் அம்பலமான பயங்கரம்..!!
ஜெர்மனியில் கடந்த ஆண்டு 14 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், 55 வயதான திருநங்கை காவல்துறை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரியல் ரீதியாக ஆணாக இருந்து தன்னை பெண்ணாக அடையாளப்படுத்திக் கொண்ட இந்த முன்னாள் அதிகாரி, தனது நண்பரின் பதின்ம வயது மகளை உணவகக் கழிவறைக்குள் வைத்து கொடூரமாகப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்தத் தாக்குதலால் நிலைகுலைந்து போன அந்தச் சிறுமிக்கு வாட்ஸ்அப் மூலமாக ஆபாசச் செய்திகளையும் அவர் அனுப்பியுள்ளார். இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து அவர் உடனடியாகப் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு, கடந்த செவ்வாய்க்கிழமை ட்ரான்ஸ்டைன் பிராந்திய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இவ்வழக்கின் விசாரணையின் போது, அந்த அதிகாரியின் கணினியிலிருந்து 3 வயதுக் குழந்தையின் ஆபாசக் காணொளி உட்படப் பல பாலியல் வன்கொடுமைப் படங்கள் கைப்பற்றப்பட்டது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் குழந்தை ஆபாசப் படங்களைத் தயாரித்தல் மற்றும் வைத்திருத்தல் போன்ற கடுமையான பிரிவுகளின் கீழ் அவர் மீது கூடுதல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தன்னை ஒரு பெண்ணாக அவர் பிரகடனப்படுத்தியிருந்தாலும், இந்த வழக்கு விசாரணை முடியும் வரை சிறையிலுள்ள ஆண்கள் பிரிவிலேயே அவர் அடைக்கப்பட்டுள்ளார். குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபிக்கப்படும் பட்சத்தில், அந்த முன்னாள் அதிகாரிக்கு மூன்று முதல் மூன்றரை ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
