LATEST NEWS
“ஐயோ.. போராடச் சென்ற இடத்தில் நேர்ந்த பெருஞ்சோகம்…” நடுவழியிலேயே பறிபோன 71 வயது விவசாயியின் உயிர்..! கண்ணீரில் மூழ்கிய விவசாயச் சங்கங்கள்..!!
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 71 வயதான கந்தசாமி என்ற விவசாயி, தவெக அரசுக்கு எதிராக திருச்சியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்பதற்காக வேனில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, பயணம் இடையிலேயே அவருக்கு திடீரெனக் கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டது.
நெஞ்சு வலி ஏற்பட்டதும் அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மறைந்த கந்தசாமியின் உருக்கமான மறைவுக்குப் பல்வேறு விவசாயச் சங்கங்கள் தங்களுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றன.
