LATEST NEWS
அடச்சீ.. மனுஷனா இவங்க..? தெரு நாய்களிடம் சிக்கி அலறிய சிறுவன்.. அருகில் நின்ற பெண் செய்த காரியம்.. நெட்டிசன்களைக் கொதித்தெழ வைத்த வைரல் வீடியோ..!!
சமீபகாலமாக தெரு நாய்களின் அச்சுறுத்தல் பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாகக் குழந்தைகள் தெருக்களில் தனியாக நடந்து செல்லக்கூட முடியாத அளவிற்கு நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், சிறுவன் ஒருவனைத் தெரு நாய்கள் துரத்திச் சென்று கடிக்க முயலும் அதிர்ச்சிகரமான சம்பவம் பதிவாகியுள்ளது.
इन दिनों आवारा कुत्तों ने आतंक मचाया हुआ है
बच्चे अकेले गली में जा ही नहीं सकते !
देखिए इस बच्चे के पीछे कुत्ते पड़ गये और
उसको नोचने की कोशिश कर रहे हैं,
लेकिन सबसे दुःखद बात ये कि महिला सब कुछ देख रहीं हैं लेकिन
इसने बच्चे को बचाने की थोड़ी सी भी कोशिश नहीं की
बस वही… pic.twitter.com/QmQiIn0Qcq— Namita (@Namita62307261) July 31, 2026
இந்தச் சம்பவத்தில் மிகவும் நெஞ்சை உலுக்கும் விஷயம் என்னவென்றால், அங்கு நின்றுகொண்டிருந்த ஒரு பெண்மணி இவையனைத்தையும் தன் கண்முன்னே பார்த்தும், அச்சிறுவனைக் காப்பாற்றச் சிறிதும் முயற்சிக்காமல் வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டு நின்றுள்ளார். ஆபத்தான சூழ்நிலையில் இருக்கும் ஒரு குழந்தையைக் கண்டு இரக்கப்படாமல், உதவி செய்ய முன்வராத அந்தப் பெண்ணின் செயல் சமூக ஊடகங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. ஆபத்தில் இருக்கும் குழந்தையைக் காப்பாற்ற வேண்டியது மனிதநேயத்தின் அடிப்படையில் அவரது கடமை அல்லவா என்ற கேள்வியையும் இது எழுப்பியுள்ளது.
