LATEST NEWS
நெஞ்சை உலுக்கும் வீடியோ..! திடீரென ரயிலின் மேல் விழுந்த 11,000 வோல்ட் மின்சார கம்பி… கண்ணெதிரே வந்த எமன்… மரண பயத்தில் அலறிய பயணிகள்..!!
மேற்கு வங்க மாநிலம் தக்ஷிணேஸ்வர் ரயில் நிலையத்தில், பயணிகள் இருந்த உள்ளூர் மின்சார ரயிலின் மேல் 11,000 வோல்ட் உயர் அழுத்த மின்சார கம்பி அறுந்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதன்கிழமை இரவு சுமார் 8:50 மணியளவில் சீல்தா-டன்குனி வழித்தடத்தில் இந்த பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரயில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த சமயத்தில் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது.
உயர் அழுத்த மின்சார கம்பி ரயிலின் கூரையின் மீது விழுந்த அடுத்த கணமே, பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டு, வானில் பெரும் பொறிகள் பறந்துள்ளன. ரயில் முழுவதும் புகை மண்டலமாக மாறியதால், உள்ளே இருந்த பயணிகள் மரண பயத்தில் அலறியடித்துக் கொண்டு ஓட முயன்றதால் ரயில் நிலையத்தில் பெரும் சலசலப்பும் பதற்றமும் உருவானது. இந்த அதிர்ச்சியூட்டும் நெஞ்சை உலுக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் மிக வேகமாகப் பரவி வருகிறது.
இவ்வளவு பெரிய கொடூர விபத்து நடந்த போதிலும், ரயிலில் இருந்த பயணிகள் யாருக்கும் ஒரு சிறிய காயம் கூட ஏற்படாமல் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அறிவியல் விதியின்படி, ரயிலின் இரும்புப் பெட்டி ஒரு ‘பாரடே கூண்டு’ போலச் செயல்பட்டதால், மின்சாரம் ரயிலின் வெளிப்புற உடல் வழியாக நேரடியாகத் தரைக்குள் பாய்ந்தது. இதனால் உள்ளே இருந்த பயணிகள் நூலிழப்பில் உயிர் பிழைத்த நிலையில், ரயில்வே நிர்வாகத்தின் அலட்சியப் போக்கிற்கு எதிராகப் பொதுமக்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
