LATEST NEWS
“வயசான காலத்துல இது தேவையா..?” கையில் தடியுடன் பாய்ந்த சுக்தேவ் மாமா.. தலையிலேயே தாக்கிய இளைஞர்… பதறவைக்கும் வீடியோ..!!!
சமூக வலைத்தளங்களில் வைரலாகும் சண்டை வீடியோக்கள், மக்களின் கவனத்தை உடனடியாகக் கவரும் உள்ளடக்கமாக மாறினாலும், அவை சமூகத்தில் எதிர்மறையான தாக்கங்களையே அதிகம் ஏற்படுத்துகின்றன. இந்நிலையில் கிராமத்தில் முதியவருக்கு வாலிபருக்கு சண்டை வீடியோ வைரலாகி வருகிறது. கிராமத்தில் நேற்று இரு தரப்பினரிடையே இடையே நிலத் தகராறு காரணமாகக் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுப் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. இதில் சுக்தேவ் மாமா என்பவர் வயதான காலத்தில், தனது முதுமையையோ அல்லது உயிருக்கான ஆபத்தையோ பற்றிச் சிறிதும் யோசிக்காமல், கையில் தடியை எடுத்துக்கொண்டு எதிர்த்தரப்பினரைத் தாக்கப் பாய்ந்து சென்றுள்ளார்.
मेरे गांव में कल दोनों पक्षों में कहा सुनी हो गई है।
मामला जमीन का बताया जा रहा हैं , सुखदेव चाचा अब काफी बुड्ढे हो गए थे।
फिर भी वो लाठी लेकर मार करने में उतारू हो गए , ना अपनी उम्र देखी और ना अपनी जिंदगी के बारे में सोचा।
जैसे ही मार करने के लिए सामने आए वैसे ही दूसरे तरफ के… pic.twitter.com/OUbJ3WnDPq— रिंकू यादव समाजवादी (@Yadav_2027) July 31, 2026
அவர் தடியுடன் அடிக்க முன்வந்த அந்த நொடியிலேயே, எதிர்த்தரப்பைச் சேர்ந்த ஒரு இளைஞர் தனது தடியை சுழற்றி அவரது தலையிலேயே பயங்கரமாகத் தாக்கியுள்ளார். அந்த ஒரே அடியில் சுக்தேவ் மாமா நிலைதடுமாறி ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். இதுபோன்ற சிறிய நிலத் தகராறுகளுக்காக மனித உயிரையே பொருட்படுத்தாமல் வன்முறையில் ஈடுபடுவது இந்த காலத்தில் எந்த விதத்தில் நியாயமாகும் என்ற கேள்வியை இச்சம்பவம் எழுப்பியுள்ளது.
