LATEST NEWS
“மன்னித்துவிடு அம்மா.. என்னால் இனி தாங்க முடியாது..!” திருமணமான 8 மாதத்தில் புதுமணப்பெண் எடுத்த கொடூர முடிவு.. கடைசியாகப் பேசிய அந்த ஒரு வீடியோ.. நடுங்க வைக்கும் பின்னணி..!!
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனின் டோய்வாலா பகுதியில், திருமணமாகி வெறும் 8 மாதங்களான அரசுப் பள்ளி ஆசிரியை சிருஷ்டி கந்தாரி என்பவர், மாமியார் வீட்டில் ஏற்பட்ட கடுமையான மன உளைச்சல் காரணமாகத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு முன்பாக அவர் வெளியிட்ட நெகிழ்ச்சியான வீடியோவில், “மன்னித்துவிடுங்கள் அம்மா, என்னால் இதை இனியும் தாங்கிக்கொள்ள முடியாது. அவர்களது எண்ணத்தை என்னால் மாற்ற முடியவில்லை” என்று தனக்கு நேர்ந்த துயரத்தைக் கூறித் தாயிடம் மன்னிப்புக் கோரியுள்ளார். வரதட்சணை கொடுமை, மனரீதியான சித்திரவதை மற்றும் ‘துரதிர்ஷ்டசாலி’ எனக்கூறி தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டதே இவரது இந்த விபரீத முடிவுக்குக் காரணம் என அவரது பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
கடந்த ஜூலை 28 அன்று சிருஷ்டிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையிலும், மாமியார் வீட்டார் அவரது பெற்றோருக்கு உரிய நேரத்தில் தகவல் தெரிவிக்காமல் மறைத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சிருஷ்டியின் தாய் அளித்த புகாரின் பேரில், டோய்வாலா காவல்துறையினர் அவரது கணவர் சௌரப் கத்ரி, மாமியார் மற்றும் நாத்தனார் ஆகிய மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிருஷ்டி மரணத்திற்கு முன் பதிவு செய்த வீடியோ ஆதாரம், பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் தடயவியல் சான்றுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
