LATEST NEWS
அன்று ஜெ.ஜெ… இன்று CM விஜய்..! பரந்தூர் விவகாரத்தில் திமுக அரசுக்கு நேர்ந்த மிகப்பெரிய பேரிடி..! ஜெயலலிதா பாணியை கையில் எடுத்த முதலமைச்சர் விஜய்..!!
ஓமந்தூராரில் ₹1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டு, 2010-ஆம் ஆண்டில் அன்றைய திமுக அரசால் திறந்து வைக்கப்பட்டது. இது, அப்போதைய முதலமைச்சர் மு. கருணாநிதியின் முக்கியக் கனவுத் திட்டங்களில் ஒன்றாகக் கருதப்பட்டது. இருப்பினும், மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அந்த வளாகத்தை அரசினர் மருத்துவமனையாக மாற்றினார்.
அதே பாணியில், சென்னை அருகே 2-வது விமான நிலையம் அமைக்கும் நோக்கில் பரந்தூர் பகுதியில் நிலம் எடுப்பு மற்றும் ஆரம்பகட்டப் பணிகளை மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தீவிரமாக மேற்கொண்டு வந்தது. தற்போது, அத்திட்டத்தை ரத்துசெய்து ஜெயலலிதா செய்ததைப் போல திமுக அரசுக்கு தவெக தலைவர் விஜய் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
