LATEST NEWS
அடுத்த பரபரப்பு..! அமித்ஷா பதவி விலக வேண்டும்.. அபிஜீத் அதிரடி டிமாண்ட்டால் நாடே அதிர்ச்சி..!!
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது பதவியை விலக வேண்டும் என்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் கோரிக்கைக்கு, CJP அமைப்பின் நிறுவனர் அபிஜீத் திப்கே முழு ஆதரவு தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தற்போதைய மத்திய அரசு மற்றும் காவல் துறையின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜக அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த அபிஜீத் திப்கே, பாரதிய ஜனதா கட்சியில் ரவுடிகள் மற்றும் குற்றப் பின்னணி கொண்டவர்கள் அதிக அளவில் நிரம்பியுள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், தற்போதைய மத்திய அரசு ஒட்டுமொத்தமாக ரவுடிகளுக்கும் குற்றவாளிகளுக்கும் ஆதரவாகவே செயல்பட்டு வருவதாக அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.
கடந்த ஜூலை 20ஆம் தேதி டெல்லியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல் துறையினர் கடுமையான தடியடி நடத்தினர். இந்த கொடூரமான தடியடி தாக்குதலை நடத்துவதற்கு டெல்லி காவல் துறைக்கு நேரடியாக உத்தரவிட்டது உள்துறை அமைச்சர் அமித்ஷா தான் என்று குற்றம் சாட்டிய அபிஜீத் திப்கே, இதற்குப் பொறுப்பேற்று அவர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினார்.
