LATEST NEWS
மேலே போறதுக்கு… கீழேயே போயிடலாம்..! ரூ.22 கோடி ரக்ஷக் சவுக் மேம்பாலத்தை.. மக்கள் புறக்கணிக்க பின்னணி என்ன..?!
பிம்ப்ரி-சிஞ்ச்வாட் பகுதியில் உள்ள ‘ரக்ஷக் சவுக்’ மேம்பாலத்தைப் பயன்படுத்தாமல், பெரும்பாலான வாகன ஓட்டிகள் அதன் கீழ் உள்ள சாலையையே பயன்படுத்துவது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஔண்ட்-ராவேத் வழித்தடத்தில் உள்ள முக்கிய சந்திப்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக, பிம்ப்ரி-சிஞ்ச்வாட் மாநகராட்சியால் சுமார் ரூ.22 கோடி செலவில் இந்த மேம்பாலம் கட்டப்பட்டு, கடந்த மே மாதம் திறக்கப்பட்டது.
இருப்பினும், பாலத்தின் செங்குத்தான அமைப்பு காரணமாக அது திறக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள்ளேயே இரண்டு விபத்துகள் நிகழ்ந்தன. இதனால் வேகக்கட்டுப்பாடு மற்றும் எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்பட்டபோதிலும், பொதுமக்கள் தொடர்ந்து பாலத்தைப் பயன்படுத்த அச்சப்படுகின்றனர். மேம்பாலத்தில் செல்வதை விடக் கீழே உள்ள சேவைச் சாலை அகலமாகவும், பாதுகாப்பாகவும், விரைவாகச் செல்லக்கூடியதாகவும் இருப்பதாக வாகன ஓட்டிகள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
https://www.instagram.com/reel/DbDzGmYtgAm/?utm_source=ig_web_button_share_sheet
அதேவேளையில், இந்த மேம்பாலம் கட்டுமான ரீதியாக முற்றிலும் பாதுகாப்பானது என்றும், போக்குவரத்துச் சிக்னல் தாமதத்தைக் குறைக்கவே இது கட்டப்பட்டது என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், வாகன ஓட்டிகள் பாலத்தில் செல்லும் போது உரிய வேகக்கட்டுப்பாட்டையும் போக்குவரத்து விதிகளையும் பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
