LATEST NEWS
அட்ராசக்க சூப்பர்..! மனைவி தகாத உறவில் இருந்தால் ஜீவனாம்சம் கிடையாது… உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு..!!
மனைவி தகாத உறவில் ஈடுபடுவதற்கான தெளிவான மற்றும் நம்பகமான ஆதாரங்களைக் கணவர் முதற்கட்ட விசாரணையிலேயே சமர்ப்பித்தால், மனைவிக்கு இடைக்கால ஜீவனாம்சம் வழங்குவதைத் தவிர்க்க முடியும் என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. விவாகரத்து மற்றும் பராமரிப்புத் தொகை கோரும் வழக்குகளில், பொதுவாக வழக்கின் இறுதித் தீர்ப்பு வரும் வரை மனைவிக்கு இடைக்காலப் பராமரிப்புத் தொகை வழங்குமாறு நீதிமன்றங்கள் உத்தரவிடுவது வழக்கம். ஆனால், மனைவி மற்றொரு நபருடன் திருமணத்தைத் தாண்டிய தகாத உறவில் வாழ்ந்து வருகிறார் என்பதற்கான அசைக்க முடியாத முதற்கட்ட ஆதாரங்களை கணவர் நீதிமன்றத்தில் நிரூபிக்கும் பட்சத்தில், இந்த இடைக்கால ஜீவனாம்சத்தை வழங்குவதிலிருந்து கணவருக்கு விலக்கு அளிக்கப்படலாம் என்று நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
இந்தத் தீர்ப்பின் போது குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 125(4)-ன் கீழ் உள்ள சட்டப்பூர்வத் தடைகளை நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்தச் சட்டப் பிரிவின்படி, ஒரு மனைவி நியாயமான காரணமின்றி கணவருடன் வாழ மறுத்தாலோ, பரஸ்பர சம்மதத்துடன் பிரிந்திருந்தாலோ அல்லது தகாத உறவில் வாழ்ந்து வந்தாலோ, அவர் பராமரிப்புத் தொகை பெறச் தகுதியற்றவர் ஆவார். எனவே, இத்தகைய சூழல்களில் இடைக்காலப் பராமரிப்புத் தொகையை மறுப்பதற்குச் சட்டத்தில் முழுமையான இடம் உள்ளது என்றும், ஆதாரங்கள் தெளிவாக இருக்கும்போது கணவரைப் பராமரிப்புத் தொகை தருமாறு வற்புறுத்த முடியாது என்றும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் வலியுறுத்தியுள்ளது.
