LATEST NEWS
“இனி கைதே செய்ய முடியாது..!” செந்தில் பாலாஜி வழக்கில் உச்சநீதிமன்றம் கொடுத்த திடீர் திருப்பம்.. திகைத்துப்போன DVAC..!!
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்ததைத் தொடர்ந்து, கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனுத் தாக்கல் செய்திருந்தார். ஆனால், விசாரணைக்குப் பிறகு அவரது மனுவை உயர்நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்தது. நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, காவல்துறை கைது செய்யக்கூடும் என்ற அச்சத்தில் அவர் மீண்டும் தலைமறைவாகிவிட்டதாகச் செய்திகள் வெளியாகி அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் உடனடியாக மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை ஆய்வு செய்த உச்சநீதிமன்றம், அவருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்தச் சாதகமான தீர்ப்பின் மூலம், இவ்வழக்கில் காவல்துறையினரால் உடனடியாகக் கைது செய்யப்படுவதிலிருந்து அவர் தற்காலிகமாகப் பாதுகாப்பு பெற்றுள்ளார்.
