LATEST NEWS
“TNSTC ஆப்பில் தவெக கொடி கலரா..?” அரசு செயலியில் திடீர் மாற்றம்.. தமிழக அரசியலில் புது சர்ச்சை..!!
தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து நிறுவனத்தின் செயலியில் செய்யப்பட்டுள்ள இந்த வண்ண மாற்றம், அரசியல் மற்றும் பொது தளங்களில் கடுமையான விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அரசு சேவை சார்ந்த செயலிகள் மற்றும் பொதுச் சொத்துகளில் எந்தவொரு அரசியல் கட்சியின் சாயலும் அல்லது அடையாளமும் பிரதிபலிக்கக் கூடாது என்பது நடுநிலையான பார்வையாகும். வழக்கமாக அரசு சார்ந்த செயலிகள் குறிப்பிட்ட நிறங்கள் அல்லது அரசின் அதிகாரப்பூர்வ இலச்சினையைக் கொண்டு வடிவமைக்கப்படும் நிலையில், ஒரு புதிய அரசியல் கட்சியின் கொடி நிறங்களை ஒத்த வண்ணங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது மக்களிடையே இயல்பாகவே சந்தேகத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளையில், இதுபோன்ற மாற்றங்கள் ததேச்சையாக டிஜிட்டல் வடிவமைப்பு ரீதியாகச் செய்யப்பட்டதா அல்லது திட்டமிட்ட அரசியல் வியூகமா என்ற கேள்வியும் எழுகிறது. மாநகரப் பேருந்துகளின் நிறமும் மாற்றப்படவுள்ளதாக பரவிய புகைப்படங்கள் சர்ச்சையை மேலும் கூட்டியுள்ளன. எதுவாக இருப்பினும், மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் அரசு நிறுவனங்களும் அதன் சேவைகளும் கட்சி அரசியல் பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் வெளிப்படைத்தன்மையுடன் அமைவதே முறையான நிர்வாகத்திற்கு அழகாகும்.
