LATEST NEWS
“ப்ளீஸ்… 2 நிமிஷம் உள்ள வர விடுங்க…!” பெண் வீட்டின் கதவைத் தட்டிய டெலிவரி மேன்… பெங்களூரில் அரங்கேறிய பகீர் சம்பவம்..!!
பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவர், ‘ஜெப்டோ’ டெலிவரி ஊழியர் தன்னிடம் குடிநீர் கேட்ட பிறகு, வீட்டிற்குள் வரத் முயன்றதாகவும் கதவை பலமாகத் தட்டியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். சாதாரண ஆன்லைன் டெலிவரியாகத் தொடங்கிய இந்த நிகழ்வு, சில நிமிடங்களிலேயே அப்பெண்ணிற்கு மிகவும் பயமுறுத்தும் அனுபவமாக மாறியது. இன்ஸ்டாகிராமில் ‘thatamethystgirl’ என்ற கணக்கு வைத்துள்ள அப்பெண், இச்சம்பவம் குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதன்படி, டெலிவரி கொடுத்த பிறகு அந்த ஊழியர் குடிநீர் கேட்டுள்ளார். வெயிலின் தீவிரத்தை உணர்ந்து அப்பெண் ஒரு முழு தண்ணீர் பாட்டிலைக் கொடுத்து எடுத்துச் செல்லுமாறு கூறியுள்ளார். ஆனால், சிறிது நேரத்திலேயே தண்ணீரை முடித்துவிட்டதாகக் கூறி மீண்டும் தண்ணீர் கேட்ட அந்த ஊழியர், சில நிமிடங்கள் வீட்டிற்குள் வர அனுமதிக்குமாறு வற்புறுத்தத் தொடங்கியுள்ளார்.
அப்பெண் இதற்கு மறுப்பு தெரிவித்து கதவை மூட முயன்றபோது, அந்த ஊழியர் அடம்பிடித்து வீட்டிற்குள் நுழைய முயன்றதாகக் கூறப்படுகிறது. மேலும், கதவை மூட விடாமல் பலமுறை அழைப்பு மணியை அடித்தும், கதவை பலமாகத் தட்டியும் அப்பெண்ணைப் பதற்றமடையச் செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து அப்பெண் சோஷியல் மீடியாவில் பகிர்ந்து கொண்ட வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, ஜெப்டோ நிறுவனம் உடனடியாக அவரைத் தொடர்புகொண்டு விசாரணையைத் தொடங்கியது. தவறிழைத்த டெலிவரி ஊழியரின் கணக்கை உடனடியாக முடக்கிய அந்நிறுவனம், எதிர்காலத்தில் அப்பெண்ணின் இருப்பிடத்திற்கு அந்த ஊழியர் டெலிவரிக்கு அனுப்பப்பட மாட்டார் என்பதற்கான எழுத்துப்பூர்வமான உறுதியையும் வழங்கியது.
https://www.instagram.com/reel/DbdKXIKzHM9/?utm_source=ig_web_button_share_sheet
மேலும், ஜெப்டோ நிறுவனம் அப்பெண்ணிற்கு மன்னிப்புக் கடிதம் அனுப்பியதோடு, அந்த ஊழியரின் ராஜினாமா கடிதத்தின் நகலையும் வழங்கியது. எதிர்காலத்தில் அந்த நபர் அப்பெண்ணின் வீட்டின் அருகிலோ அல்லது சுற்றியுள்ள பகுதியிலோ காணப்பட்டால், அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க அப்பெண்ணுடன் இணைந்து செயல்படுவதாகவும் நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது. நிறுவனத்தின் இந்த விரைவான மற்றும் தீவிரமான நடவடிக்கைக்கு அப்பெண் நன்றி தெரிவித்துள்ளார். அதேவேளையில், இச்சம்பவம் ஆன்லைன் டெலிவரிகளின் போது வாடிக்கையாளர்களின், குறிப்பாக பெண்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
