LATEST NEWS
சொந்தமாக கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்த நடிகர் அர்ஜூன்…. பலரும் பார்த்திராத அன்சீன் புகைப்படங்கள்…!!!
தமிழ் சினிமாவில் 90களில் தொடங்கி இன்றுவரை பல திரைப்படங்களில் கலக்கிக் கொண்டிருப்பவர் தான் நடிகர் அர்ஜூன்.
இவர் ஹீரோவாகவும், வில்லனாகவும் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. பல திரைப்படங்களில் இயக்கியும் நடித்திருக்கும் இவர் பொதுவாகவே ஆக்சன் திரைப்படங்களில் நடித்த ரசிகர்களை கவர்ந்தவர்.
அதன் காரணமாகவே நடிகர் அர்ஜுன் ஆக்சன் கிங் என்ற ரசிகரா அன்புடன் இன்று வரை அழைக்கப்பட்டு வருகிறார்.
இவர் லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கூட்டணியில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகள்கள் உள்ள நிலையில் அவரின் மூத்த மகள் ஐஸ்வர்யா திரைப்படங்களில் ஹீரோயினியாக நடித்துள்ளார்.
2013 ஆம் ஆண்டு வெளியான பட்டத்து யானை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஐஸ்வர்யா ஹீரோயினியாக அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்த இவர் தற்போது தெலுங்கு திரைப்படங்களில் படித்து வருகிறார்.
இதனைப் போலவே அர்ஜுனின் இரண்டாவது மகளான அஞ்சனா அர்ஜுன் உண்ணும் பழங்களின் தோள்களை வைத்து ஹேண்ட் பேக்குகளை உருவாக்கி தொழில் செய்து வருகிறார்.
உலகிலேயே இப்படி செய்வது இதுதான் முதல் முறை என்று கூறப்படும் நிலையில் இத்தகைய பெருமைக்குரிய சிறப்பால் அஞ்சனா பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறார்.
இந்நிலையில் இவ்வாறு அனைவரும் பிசியாக இருந்தாலும் குடும்பத்துடன் எப்போதும் அதிக நேரம் செலவிட்டு வருகின்றனர்.
அடிக்கடி தனது மகள்களுடன் வெளியில் செல்லும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அர்ஜுன் இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில் அர்ஜுன் சொந்தமாக அனுமான் கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்துள்ளார்.
அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க