LATEST NEWS
மலேசியாவில் பூஜையுடன் தொடங்கிய விஜய் சேதுபதியின் அடுத்த படம்…. ஹீரோயின் இவங்கதானா?…. வைரலாகும் புகைப்படங்கள்….!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. முன்னணி ஹீரோவாக வலம் வந்தாலும் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் தயங்காமல் நடிப்பார்.
இவர் இறுதியாக விடுதலை திரைப்படத்தின் சூரி உடன் இணைந்து நடித்திருந்தார். அந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இவர் மாஸ்டர் மற்றும் விக்ரம் போன்ற திரைப்படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார்.
இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்திய அளவில் அனைவரிடமும் கவனத்தை ஈர்த்து வருகிறது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள மொழிட்டா பல தென்னிந்திய மொழி திரைப்படங்களில் பிஸியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அதே சமயம் அட்லீ இயக்கும் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்திலும் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இப்படி ஹீரோ மற்றும் வில்லன் என அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்து மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார்.
இந்நிலையில் விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் ஆறுமுக குமார் மீண்டும் கூட்டணி சேர்ந்து இருக்கும் படத்தின் ஷூட்டிங் நேற்று தொடங்கியது.
மலேசியாவில் நேற்று பூஜை நடந்து முடிந்தது. இதற்கு முன்பு இதே கூட்டணி ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் என்ற திரைப்படத்தில் பணியாற்றினர். அதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் இணைந்துள்ளனர்.
இந்த திரைப்படத்தில் கன்னட நடிகை ருக்மிணி வசந்த் ஹீரோயினியாக நடிக்கின்றார். அவர் ஏற்கனவே இரண்டு கன்னட திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது தமிழில் முதல் முறையாக ஹீரோயினியாக களமிறங்குகிறார்.
தற்போது மலேசியாவில் தொடங்கிய விஜய் சேதுபதியின் அடுத்த படத்தின் பூஜை நடைபெற்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.