LATEST NEWS
மனைவி மகாலட்சுமி இல்லாமல் தனியாக புகைப்படம் வெளியிட்ட ரவீந்தர்…. லேட்டஸ்ட் பதிவால் ஷாக்கான ரசிகர்கள்…!!!
சின்னத்திரை சீரியல் நடிகைகளில் ஒருவராக ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகை மகாலட்சுமி. இவர் கடந்த செப்டம்பர் மாதம் தயாரிப்பாளர் ரவிந்தரை இரண்டு வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் திடீரென நடந்த நிலையில் பல சர்ச்சைக்குள்ளானது.
அதுமட்டுமல்லாமல் பல விமர்சனங்களும் எழுந்த நிலையில் இவை அனைத்தையும் கண்டு கொள்ளாத ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி தங்கள் வாழ்க்கையில் சிறப்பாக வாழ்ந்து வருவதாக தெரிவித்தனர். மறுபக்கம் மகாலட்சுமி சீரியலில் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றார். அது மட்டுமல்லாமல் பல விளம்பரங்களையும் செய்து அதன் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்.
இந்நிலையில் ரவீந்தர் தனியாக நின்றுள்ள புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். வாழ்வதற்கான காரணம் கடினமான நேரங்களில் புன்னகையை நேசிப்பதே,ஏனென்றால் அவர்கள் உங்களின் வருத்தங்களில் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று ஒரு பதிவை அவர் பகிர்ந்துள்ளார். மனைவி மகாலட்சுமி இல்லாமல் அவர் புகைப்படம் வெளியிட்ட இந்த பதிவை பகிர்ந்து உள்ள நிலையில் இருவருக்கும் ஏதாவது கருத்து வேறுபாடு என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க