LATEST NEWS
அர்னவ் அப்பவே அப்படித்தான் திருநங்கை பேசிய ஆடியோ…..! பெரும் பரபரப்பு….. மறுபடியும் முதல்ல இருந்தா…!!!
சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கேளடி கண்மணி என்ற சீரியல் மூலம் பிரபலமானவர்கள் நடிகர் அர்னவ் மற்றும் திவ்யா. இந்த சீரியலில் இவர்கள் நடித்துக் கொண்டிருந்தபோது இவர்களுக்குள் காதல் ஏற்பட கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்பு தற்போது திவ்யா கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் அர்னவ் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா சீரியலில் செல்லமாவாக நடித்து வரும் நடிகையுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாக கூறி மாறி, மாறி சண்டை போட்டு வந்தனர்.
இந்நிலையில் கர்ப்பிணியாக இருந்த தன்னை அர்னவ் தாக்கியதாக கூறி ,சென்னை காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பெயரில் காவல்துறையினர் கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர் . மேலும் வழக்கில் நடிகர் அர்னவை விசாரணைக்கு ஆஜராகம்படி தெரிவித்திருந்தனர் .ஆனால் அவர் ஆஜராகாமல் இருந்து வந்ததால் படப்பிடிப்பு தளத்தில் சென்று காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.
இதை தொடர்ந்து இரண்டு மணி நேரம் நடைபெற்ற விசாரணைக்கு பிறகு அவரை வரும் 28ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க அம்பத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனால் நடிகர் அர்னவ் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஏமாற்றியதாக மலேசியாவை சேர்ந்த திருநங்கை ஒருவர் நடிகை திவ்யாவின் வழக்கறிஞரிடம் பேசும் ஆடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தன்னுடன் பழகி வரும்போது எங்கள் ஊரில் உள்ள மாலில் வைத்து தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் வேறொரு பெண்ணுடன் அவர் தொடர்பில் இருந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
