LATEST NEWS
முதலமைச்சர் பதவியை மறந்து காலடியில் அமர்ந்த விஜய்…! நடிகர் பார்த்திபன் நெகிழ்ச்சி..!!
பூர்ணிமா பாக்யராஜ் அவர்களின் காலடியில் தமிழக முதல்வர் விஜய் அவர்கள் மண்டியிட்டு அமர்ந்த நிகழ்வு, பார்ப்பவர்களிடையே மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு முக்கிய துக்க நிகழ்வில் கலந்துகொண்ட முதல்வர் விஜய், பூர்ணிமா பாக்யராஜின் அருகே தரையில் அமர்ந்து அவருக்கு ஆறுதல் கூறினார்.
இந்த நெகிழ்ச்சியான தருணம் குறித்து இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன் அவர்கள் தனியார் ஊடகப் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதில், விஜய் அவர்கள் “முதலமைச்சர்” என்ற தன்னுடைய மிக உயர்ந்த பதவியைப் பற்றியெல்லாம் துளியும் யோசிக்காமல், அதை முற்றிலும் மறந்துவிட்டு மிகவும் எளிமையாக இந்தச் செயலைச் செய்தார் என்று உணர்ச்சிபொங்கக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், முதல்வர் விஜய் எங்கு அமர்வது என்று ஒரு நொடி யோசிப்பதாகத் தங்களுக்குத் தெரிந்திருந்தால், அந்த கணமே அவருக்கு நாற்காலி போட்டுக் கொடுத்திருப்போம் என்று கூறினார். ஆனால், அவர் நாற்காலிக்காகக் கூடக் காத்திருக்காமல் உடனடியாகத் தரையில் அமர்ந்து ஆறுதல் கூறினார் என்று பார்த்திபன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ள இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
