LATEST NEWS
“திமுக எம்.எல்.ஏ-க்களை வாங்க SOFA அனுப்பி… 24 மணி நேரமும் குதிரை பேரம்.. தவெக அரசை கிழித்து தொங்கவிட்ட உதயநிதி ஸ்டாலின்..!!
பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தில் தற்போதைய தவெக அரசு மக்கள் நலனைப் புறந்தள்ளிவிட்டு குதிரை பேர அரசியலில் மட்டுமே முழு நேரமாக ஈடுபட்டு வருவதாகக் கடுமையாக விமர்சித்துள்ளார். மக்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்தி ஆட்சியை நடத்தாமல், திமுகவை எப்படியாவது முடக்கிவிட வேண்டும் என்ற நோக்கில் தவெக அரசு பழிவாங்கும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். 24 மணி நேரமும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.-க்களுக்குப் பல்வேறு ஆஃபர்களை வழங்கி, அவர்களைத் தங்களது பக்கம் இழுப்பதையே இந்த அரசு தங்களின் முதன்மை வேலையாகச் செய்து வருவதாகச் சாடியுள்ளார்.
தவெக ஆட்சியை “சோபா மாடல் அரசு” என்று மிகக் காட்டமாக விமர்சித்த உதயநிதி ஸ்டாலின், சட்ட ஒழுங்கை நிலைநாட்டுவதில் இந்த அரசு முற்றிலும் தோல்வியடைந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். தவெக நிர்வாகிகள் மீது அவர்களின் சொந்தக் கட்சியினரே அடுக்கடுக்கான புகார்களைக் கொடுத்தாலும், அதன் மீது எந்தவொரு சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்கப்படாமல் மூடி மறைக்கப்படுகிறது என்று சாடியுள்ளார். விமர்சனங்களை எதிர்கொள்ளத் துணிவில்லாமல், ஆளுங்கட்சிக்கு எதிராகப் பேசுபவர்களைக் கைது செய்வதையே இந்த அரசு வாடிக்கையாகக் கொண்டுள்ளது என்றும், அவ்வாறு கைது செய்யப்படும் ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தில் இந்த ஆட்சியாளர்கள் குட்டுப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுதந்திரப் போராட்டக் காலத்தின் மிசா மற்றும் அவசரநிலை போன்ற கொடுங்கோல் அடக்குமுறைகளையே மிகத் துணிச்சலாக எதிர்கொண்டு வென்ற பாரம்பரியம் திமுக-வுக்கு உண்டு என்பதை உதயநிதி ஸ்டாலின் இந்த பேட்டியில் நினைவு கூர்ந்துள்ளார். தத்தித்தாவி தற்செயலாக ஆட்சிக்கு வந்துவிட்டு தற்போது தறிகெட்டுப் போய் தடம் மாறி அரசு நடத்தும் இந்த தவெக அரசின் வெற்று மிரட்டல்களுக்கும், பழிவாங்கும் கைது நடவடிக்கைகளுக்கும் திமுகவின் கடைக்கோடி தொண்டன் கூட எப்போதும் அஞ்சமாட்டான் என்று அவர் சவால் விடுத்துள்ளார். ஜனநாயகத்திற்குப் புறம்பாகச் செயல்படும் இந்த Sofa அரசின் செயல்பாடுகளால், அவர்கள் மக்கள் மன்றத்தில் மிகப்பெரிய சரிவைச் சந்திப்பது மிக நிச்சயம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
