LATEST NEWS
‘தமிழ் நடிகை பத்ம பிரியா திருமணத்திற்கு’…”பிறகு என்ன செய்கிறார்” தெரியுமா…? ‘வெளிவந்துள்ள புகைப்படம்’..!
தமிழ் சினிமாவில் தவமாய் தவமிருந்து படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பத்மப்ரியா அப்படம் தேசிய விருது பெற்றது மேலும் சிறந்த அறிமுக நடிகையான பிலிம் பேர் விருதை பெற்றார். அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து. சத்தம் போடாதே, மிருகன், பொக்கிஷம் போன்ற பங்களில் நடித்துவந்தார்.
இவர் டெல்லியை பூர்விகமாய் கொண்டவர் இவர் முதலில் மாடலிங் செய்துவந்தார். அதன் பின்னர் கடந்த 2001ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் மிஸ் ஆந்திரா பிரதேஷ் என்ற அழகிய பட்டத்தை வென்றார்.
முதன் முதலில் தெலுங்கு சினிமாவில் வெளிவந்த “சீனு வசந்தி லட்சுமி” என்ற படத்தின் மூலம் அறிமுகமானர் அதை தொடர்ந்து மலையாள சினிமாக்களிலும் நடித்து வந்தார்.மேலும் இவர்சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்று தான் ஆசைப்பட்டார். அதனால் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாளைய இயக்குனர் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தான் இயக்கிய குறும்படங்களை வெளியிட்டார்.
பின்னர் ஜாஸ்மின் ஷாஹ் என்பவரை கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ம் தேதி திருமணம் செய்து கொண்டு பேமலி பெண்ணாக மாறியுள்ளார். இருந்தாலும் இன்னும் இளமை குறையாமல் இருப்பதால் ரசிகர்கள் ஆச்சரியப்படுகிறார்கள்.